ஐபில் 2026 - மும்பைக்கு 241 ரன்கள் இலக்குஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் அனைத்து கப்பல்களும் முற்றுகையிடப்படும் : அதிபர் டொனால்ட் டிரம்ப்பாஜகவுக்கு விழும் ஒவ்வொரு வாக்கும் அரசியலமைப்பை காக்கும் விழுமியங்கள் மீது விழும் மரண அடி: மு.க. ஸ்டாலின்ஐபிஎல் போல தேர்தல் முடிவு! தில்லி தோற்று தமிழ்நாடு வெல்ல வேண்டும்! - மு.க. ஸ்டாலின்ஜன நாயகன் படம் கசிந்த விவகாரம்: 6 பேர் கைது!ஈரானுக்கு இதைவிடச் சிறந்த ஆஃபர் வழங்க முடியாது! - அமெரிக்க துணை அதிபர்ஈஸ்டர் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி உக்ரைன் தாக்குதல்: ரஷியா குற்றச்சாட்டுபாகிஸ்தானுக்கு நிதி நெருக்கடி: 500 கோடி டாலர் வழங்கும் சௌதி, கத்தார்! புதுப்பொலிவுடன் தேர்தலைச் சந்திக்கிறது அதிமுக: எடப்பாடி பழனிசாமி
/

124. வரமதே கொளா - பாடல் 6

பாம்பின் படத்தினை

News image
Updated On :22 மார்ச் 2019, 6:30 pm


பாடல் 6:

    ஏந்தரா எதிர் வாய்ந்த நுண்ணிடைப் பூந்தண் ஓதியாள் சேர்ந்த பங்கினன்
    பூந்தராய் தொழு மாந்தர் மேனி மேல் சேர்ந்திரா வினையே

விளக்கம்:

ஓதி=கூந்தல்; ஓதியாள்=கூந்தலை உடைய உமை நங்கை; ஏந்து=படம் விரிக்கும்; பூந்தராய் என்ற எழுத்தின் இரண்டாவது எழுத்து ந். இந்த எழுத்து இரண்டு அடிகளிலும் இரண்டாவது எழுத்தாக வருகின்றது. மேலும் பல சீர்களிலும் இரண்டாவது எழுத்தாக வருவதை காணலாம். 

பொழிப்புரை: 

படம் எடுத்து ஆடும் பாம்பின் படத்தினை ஒத்த மார்பகங்கள் மற்றும் நுண்ணிய இடையினை உடையவளும், பூக்கள் அணியப் பெற்று குளிர்ந்து காணப்படும் கூந்தலை உடையவளும் ஆகிய உமை அன்னையைத் தனது உடலின் ஒரு பாகமாகக் கொண்டுள்ள சிவபெருமான் வீற்றிருக்கும் பூந்தராய் திருத்தலத்தை தொழும் மாந்தர்களின் மேல் கெடுதியை ஏற்படுத்தும் தீய வினைகள் நில்லாமல் விலகிவிடும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.