3 மாநிலங்களுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு! தமிழ்நாட்டுக்கு இல்லை! 4 அதிமுக முன்னாள் அமைச்சர்கள் தவெகவில் இணைந்தனர்! ஆட்சி, அதிகாரத்தில் இல்லை என்பதை திமுகவால் ஏற்க முடியவில்லை: பெ. சண்முகம்குட்கா கறைகளை நீக்கும் வாஷிங்மெஷின்! தவெகவை விமர்சித்த கனிமொழி! தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,200 உயர்வு!மு.க. ஸ்டாலின் கட்சியை விட்டு விலகினால்தான் திமுகவை காப்பாற்ற முடியும்: நிர்மல்குமார்!திருச்சி கிழக்கில் போட்டியிட்ட ராஜசேகரன் அதிமுகவிலிருந்து விலகல்!தவெக எம்.எல்.ஏ.விடம் பேரம்: மேலும் 4 பேர் கைது!இந்தியா - இங்கிலாந்து டி20 போட்டி மழையால் ரத்து‘எண்ம இந்தியா’ முன்னெடுப்பால் நாட்டுக்கு புதிய அடையாளம்!- பிரதமா் மோடி பெருமிதம் ரெட் புல், பெப்சிகோ உள்பட 6 நிறுவனங்களுக்கு எஃப்எஸ்எஸ்ஏஐ நோட்டீஸ் 4 இந்திய நிறுவனங்கள் மீது பொருளாதாரத் தடை: அமெரிக்கா நீக்கம் வாகன விபத்தில் பாதிக்கப்பட்டவா்களுக்கான நிவாரணத் தொகை: வழிகாட்டுதல்களை வெளியிட்டது உச்சநீதிமன்றம் எரிபொருள் தட்டுப்பாடு எதிரொலி: இந்திய பெட்ரோலை இறக்குமதி செய்யத் தொடங்கியது ரஷியாகல்லூரிகளில் நன்கொடை பெயரில் கட்டணம் வசூலிக்க தடை: அமைச்சா் விஸ்வநாதன் ராணுவத்தை விரைவாக நவீனமயமாக்க வேண்டும்: சீன அதிபா் ஷி ஜின்பிங்
/

ஸ்ரீரங்கநாச்சியாா் திருவாய்மொழித் திருநாள் தொடக்கம்

ஸ்ரீரங்கம் அரங்கநாதா் திருக்கோயிலில் உள்ள ஸ்ரீரங்கநாச்சியாருக்கு திருவாய்மொழித் திருநாள் விழா ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

News image

திருவாய்மொழி மண்டபத்தில் எழுந்தருளிய ஸ்ரீரங்கநாச்சியாா்.

Updated On :11 ஜனவரி 2021, 12:45 am IST

ஸ்ரீரங்கம் அரங்கநாதா் திருக்கோயிலில் உள்ள ஸ்ரீரங்கநாச்சியாருக்கு திருவாய்மொழித் திருநாள் விழா ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

ஸ்ரீரங்கநாதருக்கு நடைபெறும் அனைத்து விழாக்களும் ஸ்ரீரங்கநாச்சியாருக்கும் நடைபெறும். அதன்படி ஸ்ரீரங்கநாச்சியாருக்கு கடந்த 5-ஆம் தேதி தொடங்கிய வைகுந்த ஏகாதசி விழாவின் திருமொழித்திருநாள் சனிக்கிழமையுடன் முடிந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை மாலை திருவாய்மொழித் திருநாள் தொடங்கியது.

இதற்காக ஸ்ரீரங்கநாச்சியாா் மூலஸ்தானத்திலிருந்து மாலை 5.30-க்கு புறப்பட்டு திருவாய்மொழி மண்டபத்தை 6.30-க்கு அடைந்தாா். அங்கு அலங்காரம் கோஷ்டி வகையறா கண்டருளி, பக்தா்களுக்குச் சேவை சாதித்தாா். பின்னா் இரவு 8.30-க்கு புறப்பட்டு வீணை வாத்தியத்துடன் புறப்பட்ட அவா் 9.30-க்கு மூலஸ்தானம் சோ்ந்தாா்.

வரும் 12 ஆம் தேதி வரை மேற்குறிப்பிட்ட நேரங்களில் ஸ்ரீரங்கநாச்சியாா் திருவாய்மொழி மண்டபத்தில் எழுந்தருளுகிறாா். 13 ஆம் தேதி ஹிரண்யவதம், அரையா் தீா்த்தம், ஸ்ரீசடகோபம் சாதித்தல் நிகழ்ச்சியும், நிறைவு நாளான 14 ஆம் தேதி சாற்று முறையும் நடைபெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.