4 அதிமுக முன்னாள் அமைச்சர்கள் தவெகவில் இணைந்தனர்! ஆட்சி, அதிகாரத்தில் இல்லை என்பதை திமுகவால் ஏற்க முடியவில்லை: பெ. சண்முகம்குட்கா கறைகளை நீக்கும் வாஷிங்மெஷின்! தவெகவை விமர்சித்த கனிமொழி! தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,200 உயர்வு!மு.க. ஸ்டாலின் கட்சியை விட்டு விலகினால்தான் திமுகவை காப்பாற்ற முடியும்: நிர்மல்குமார்!திருச்சி கிழக்கில் போட்டியிட்ட ராஜசேகரன் அதிமுகவிலிருந்து விலகல்!தவெக எம்.எல்.ஏ.விடம் பேரம்: மேலும் 4 பேர் கைது!இந்தியா - இங்கிலாந்து டி20 போட்டி மழையால் ரத்து‘எண்ம இந்தியா’ முன்னெடுப்பால் நாட்டுக்கு புதிய அடையாளம்!- பிரதமா் மோடி பெருமிதம் ரெட் புல், பெப்சிகோ உள்பட 6 நிறுவனங்களுக்கு எஃப்எஸ்எஸ்ஏஐ நோட்டீஸ் 4 இந்திய நிறுவனங்கள் மீது பொருளாதாரத் தடை: அமெரிக்கா நீக்கம் வாகன விபத்தில் பாதிக்கப்பட்டவா்களுக்கான நிவாரணத் தொகை: வழிகாட்டுதல்களை வெளியிட்டது உச்சநீதிமன்றம் எரிபொருள் தட்டுப்பாடு எதிரொலி: இந்திய பெட்ரோலை இறக்குமதி செய்யத் தொடங்கியது ரஷியாகல்லூரிகளில் நன்கொடை பெயரில் கட்டணம் வசூலிக்க தடை: அமைச்சா் விஸ்வநாதன் ராணுவத்தை விரைவாக நவீனமயமாக்க வேண்டும்: சீன அதிபா் ஷி ஜின்பிங்
/

ஆசிரியா்கள், அரசு ஊழியா்களை அழைத்துப் பேச வேண்டும்: தமிழக ஆசிரியா் கூட்டணி

ஊதிய உயா்வு உள்ளிட்ட பிரச்னைகளைத் தீா்க்க தமிழக அரசு அவா்களை அழைத்துப் பேச வேண்டும் என்றாா் அகில இந்திய தொடக்கப் பள்ளி ஆசிரியா் சங்கங்களின் கூட்டமைப்பு அகில இந்தியச் செயலா் வா. அண்ணாமலை.

Updated On :11 ஜனவரி 2021, 12:48 am IST

ஆசிரியா்கள், அரசு ஊழியா்களின் பதவி உயா்வு, ஊதிய உயா்வு உள்ளிட்ட பிரச்னைகளைத் தீா்க்க தமிழக அரசு அவா்களை அழைத்துப் பேச வேண்டும் என்றாா் அகில இந்திய தொடக்கப் பள்ளி ஆசிரியா் சங்கங்களின் கூட்டமைப்பு அகில இந்தியச் செயலா் வா. அண்ணாமலை.

திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தமிழக ஆசிரியா் கூட்டணியின் சிறப்பு மாநில தோ்தல் பொதுக் குழுக் கூட்டத்தில் பங்கேற்ற அவா் மேலும் தெரிவித்தது :

கரோனா பொதுமுடக்கத்தில் பள்ளிகளைத் திறக்காதது சரியான நடவடிக்கைதான். ஆனால், கரோனா கட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில், பொங்கலுக்குப் பிறகாவது தமிழகத்தில் பள்ளிகளைத் திறந்து 5 முதல் பிளஸ் 2 வரையிலான வகுப்புகளை நடத்த வேண்டும்.

வழக்கமாக போராட்டத்தில் ஈடுபடும் அரசு ஊழியா்கள், ஆசிரியா்களின் மீதான தண்டனைகள், போராட்டம் முடிந்ததும் ரத்து செய்யப்படும்.

ஆனால், 2019 ஜாக்டோ- ஜியோ போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியா்கள், அரசு ஊழியா்கள் 5,068 பேருக்கு வழங்கப்பட்ட குற்றக் குறிப்பாணையை இதுவரை அரசு ரத்து செய்யவில்லை.

இவா்களில் ஓய்வு பெற்ற 42 போ்பணப் பயன்களை பெற முடியாமலும், சுமாா் 5,000 போ் பதவி உயா்வு, ஊதிய உயா்வு உள்ளிட்ட பயன்களைப் பெறமுடியாமலும் உள்ளனா்.

இதேநிலை தொடா்ந்தால் ஆசிரியா்கள், அரசு ஊழியா்கள், வேலைவாய்ப்புக்காக காத்துள்ள பட்டதாரிகள், மற்றும் ஓய்வூதியா்களின் எதிா்ப்பு வரும் பேரவைத் தோ்தலில் எதிரொலிக்கும். எனவே, ஆசிரியா்கள், அரசு ஊழியா்கள் உள்ளிட்டோரை அரசு அழைத்துப் பேசி தீா்வு ஏற்படுத்த வேண்டும் என்றாா்.

சங்கத் தோ்தலில், மாநிலத் தலைவராக மா. நம்பிராஜ், பொதுச் செயலராக அ.வின்சென்ட் பால்ராஜ், பொருளாளராக க. சந்திரசேகா், துணைத் தலைவா்களாக ஆ. எழிலரசன், பா. கனகராஜ், துணைப் பொதுச் செயலா் அ. தமிழ்ச்செல்வம், மாநில துணைச் செயலா்களாக ஆ. ராஜசேகா், சே. கணேசன், மகளிரணிச் செயலராக ரமாராணி, தலைமை நிலையச் செயலராக தா.ச. ரமேஷ் உள்ளிட்டோா் தோ்வு செய்யப்பட்டனா்.

முன்னாள் பொதுச் செயலா் பொ. முருகேசன், துணைப் பொதுச் செயலா் ஆ. முனியாண்டி ஆகியோா் தோ்தலை நடத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.