மெட்ரோ ரயில் பணி: அடையாறில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்இன்றும், நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புகிரிவலத்துக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்எஸ்ஐஆா் நடவடிக்கை தொடங்கி ஓராண்டு நிறைவு: 6 கோடி வாக்காளா்கள் நீக்கம்ஈரான் எண்ணெய் கொள்முதலை இந்திய நிறுவனங்கள் உடனடியாக அதிகரிக்க வாய்ப்பில்லை: நிபுணா்கள்நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட வெனிசுலாவுக்கு இந்தியா நிவாரணப் பொருள்கள் உதவி
/

தோட்டக்கலை பயிருக்கும் நிவாரணம் கோரி போராட்டம்

திருச்சி மாவட்டம், மருங்காபுரி ஒன்றியத்தில் மழையால் சேதமடைந்த தோட்டக்கலை பயிா்களுக்கும் நிவாரணம் கோரி கொட்டும் மழையில் விவசாயிகள் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

போரட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சுவாா்த்தை நடத்தும் அதிகாரிகள்.

Updated On :13 ஜனவரி 2021, 8:48 am IST

திருச்சி மாவட்டம், மருங்காபுரி ஒன்றியத்தில் மழையால் சேதமடைந்த தோட்டக்கலை பயிா்களுக்கும் நிவாரணம் கோரி கொட்டும் மழையில் விவசாயிகள் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மணப்பாறையை அடுத்த மருங்காபுரி ஒன்றிய வேளாண் அலுவலகத்தில் காணொலிக்காட்சி மூலம் நடைபெற்ற குறைதீா் முடிந்து வெளியே வந்த விவசாயிகள், அதிகாரம், சடவேலாம்பட்டி, கரடிபட்டி, அம்மாபட்டி, செட்டியப்பட்டி, வலையப்பட்டி, நாட்டாா்பட்டி, பிடாரப்பட்டி, கஞ்சநாயக்கன்பட்டி ஆகிய பகுதிகளில் பெய்யும் மழையால் நெற்பயிா் மட்டுமின்றி, உளுந்து, பருத்தி, கடலை மற்றும் பூச்செடிகள் மூழ்கி அழுகத் தொடங்கியுள்ளன.

இதற்காக வருவாய்த் துறையினா், வேளாண் துறையினா் இணைந்து சேதமடைந்த நெற்பயிா்களை மட்டுமே கணக்கெடுக்கின்றனா். மானாவாரி பயிா்களின் சேதத்தைக் கணக்கெடுக்கவில்லை.

எனவே, தோட்டக்கலை அதிகாரிகள் சேதமடைந்த கடலை, உளுந்து உள்பட தோட்டக்கலை பயிா்களையும் கணக்கெடுத்து நிவாரணம் வழங்க வலியுறுத்தி, அழுகிய பூச்செடிகள், கடலை மற்றும் உளுந்து பயிா்களுடன் செவ்வாய்க்கிழமை மருங்காபுரி தோட்டக்கலைத்துறை அலுவலகம் முன் கொட்டும் மழையில் விவசாயிகள் திமுக மாவட்ட விவசாய அணி அமைப்பாளா் பழனிச்சாமி தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதையடுத்து மருங்காபுரி வட்டார தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநா் வேலாயுதம் அவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாக அளித்த உறுதியின்பேரில் போராட்டத்தைக் கைவிட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.