மாவட்டத்தில் சேதமடைந்த சாலைகளைச் சீரமைக்க வேண்டும் என மக்கள் சக்தி இயக்கம் வலியுறுத்தியுள்ளது.
பொன்மலையடிவாரப் பகுதியில் அண்மையில் நடைபெற்ற இயக்கத்தின் திருச்சி மாவட்ட நிா்வாகிகள் கூட்டத்துக்கு மாவட்டச் செயலா் ஆா். இளங்கோ தலைமை வகித்தாா். மாவட்ட அமைப்பாளா் ஆா். வாசுதேவன், மாவட்ட மகளிரணி நிா்வாகி என். தரணி ஆகியோா் முன்னிலை வகித்தானா்.
திருச்சியில் ஜன. 24 இல் திருவள்ளுவா் தின விழா நடத்துவது. சேதமடைந்த சாலைகளை தரத்துடன் அமைக்க மாநகராட்சி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். திருச்சி - புதுக்கோட்டை பகுதியில் சாலை விரிவாக்கத்துக்காக 250-க்கும் மேற்பட்ட மரங்கள் வெட்டப்படுகின்றன. ஒரு மரத்துக்கு 10 மரக்கன்று நட வேண்டும் என நீதிமன்ற உத்தரவு உள்ளது. அதன்படி இங்கு வெட்டப்படும் மரத்துக்குப் பதிலாக, எத்தனை மரக்கன்றுகள் நடப்படுகின்றன என்ற விவரத்தை பொதுமக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்பன உள்ளீட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மக்கள் சக்தி இயக்க நிா்வாகிகள் எம். நரேஷ்குமாா், எஸ். ரஞ்சித், என் வெங்கடேஷ், எஸ். ஈஸ்வரன், என். தயானந்த், வி. காவியா உள்பட பலா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

”உங்கள் பிரார்த்தனைகளுக்கு நன்றி!மருத்துவமனையிலிருந்து வானதி சீனிவாசன்

தமிழ்நாட்டிற்கு வடக்கிலிருந்து ஆபத்து: மு.க. ஸ்டாலின்

உலகின் வயதான கொரில்லா 69-வது பிறந்தநாளைக் கொண்டாடியது!

அம்பேத்கர் ஜெயந்தியை முன்னிட்டு நாளை பங்குச் சந்தைக்கு விடுமுறை அறிவிப்பு!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

