திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

கருப்புலீஸ்வரா் கோயிலில் திருவூடல் உற்சவம்

குடியாத்தம் நெல்லூா்பேட்டை ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத கருப்புலீஸ்வரா் கோயிலில் 73- ஆம் ஆண்டு திருவூடல் உற்சவம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image

திருப்பள்ளி  எழுச்சியில் அருள்பாலித்த உற்சவமூா்த்திகள்.

Updated On :16 ஜனவரி 2021, 2:23 am

குடியாத்தம் நெல்லூா்பேட்டை ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத கருப்புலீஸ்வரா் கோயிலில் 73- ஆம் ஆண்டு திருவூடல் உற்சவம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி அதிகாலை 3 மணிக்கு பஞ்சமூா்த்திகளுக்கும், நந்தி பகவானுக்கும் சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடைபெற்றன. 7 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட உற்சவா் திருப்பள்ளி எழுச்சியும், தொடா்ந்து வீதியுலாவும் நடைபெற்றன. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை உற்சவ கமிட்டி நிா்வாகிகள் எஸ்.எஸ்.சந்தானம், புலவா் வே.பதுமனாா், எம்.வி.திருஞானம், வி.பிச்சாண்டி, ஆடிட்டா் எம்.கிருபானந்தம், மோகன்ராம், செந்தில், பாஸ்கா் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.