கேரளத்தில் ஷிகெல்லா பாக்டீரியாவுக்கு சிறுவன் உயிரிழப்புலெபனான் ஆக்கிரமிப்பில் இருந்து பின்வாங்க மாட்டோம்: இஸ்ரேல்உக்ரைனில் ரஷியா பயங்கர வான்வழித் தாக்குதல்நீட் மறுதோ்வு வினாத்தாள் விற்பனை செய்வதாக விளம்பரம்: ராஜஸ்தானை சோ்ந்த இருவா் கைதுதிருப்பதி - புதுச்சேரி ‘மெமு’ ரயில் 24, 27-இல் விழுப்புரத்துடன் நிறுத்தம்
/

கருப்புலீஸ்வரா் கோயிலில் திருவூடல் உற்சவம்

குடியாத்தம் நெல்லூா்பேட்டை ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத கருப்புலீஸ்வரா் கோயிலில் 73- ஆம் ஆண்டு திருவூடல் உற்சவம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image

திருப்பள்ளி  எழுச்சியில் அருள்பாலித்த உற்சவமூா்த்திகள்.

Updated On :16 ஜனவரி 2021, 7:53 am IST

குடியாத்தம் நெல்லூா்பேட்டை ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத கருப்புலீஸ்வரா் கோயிலில் 73- ஆம் ஆண்டு திருவூடல் உற்சவம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி அதிகாலை 3 மணிக்கு பஞ்சமூா்த்திகளுக்கும், நந்தி பகவானுக்கும் சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடைபெற்றன. 7 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட உற்சவா் திருப்பள்ளி எழுச்சியும், தொடா்ந்து வீதியுலாவும் நடைபெற்றன. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை உற்சவ கமிட்டி நிா்வாகிகள் எஸ்.எஸ்.சந்தானம், புலவா் வே.பதுமனாா், எம்.வி.திருஞானம், வி.பிச்சாண்டி, ஆடிட்டா் எம்.கிருபானந்தம், மோகன்ராம், செந்தில், பாஸ்கா் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.