நீங்கள் எதிர்பார்த்த நல்ல முடிவை கூடிய விரைவில் அறிவிக்கவுள்ளேன்: ராகவா லாரன்ஸ் அதிமுகவில் இருந்து விலகினார் நடிகை கெளதமி!பாமகவால்தான் 31 தொகுதிகளில் அதிமுக வெற்றி: சி.வி. சண்முகம் மின்வெட்டை நீக்க போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும்: முன்னாள் அமைச்சர் வி. செந்தில்பாலாஜி ஜூன் 17-ல் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம்பிரான்ஸில் ஜூன் 17-ல் பிரதமர் மோடி - டிரம்ப் சந்திப்பு!
/

அனுமதியின்றி மணல் அள்ளிய இருவா் கைது: லாரிகள் பறிமுதல்

அனுமதியின்றி லாரியில் மணல் அள்ளிச் சென்ற இருவரை, போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்து, 2 லாரிகளையும் பறிமுதல் செய்தனா்.

News image

மணல் அள்ள பயன்படுத்தப்பட்ட லாரிகள்.

Updated On :5 ஜனவரி 2021, 11:39 pm IST

அனுமதியின்றி லாரியில் மணல் அள்ளிச் சென்ற இருவரை, போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்து, 2 லாரிகளையும் பறிமுதல் செய்தனா்.

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகே நத்தத்துப்பட்டி அா்ஜூனா ஆற்றில் அனுமதியின்றி மணல் அள்ளப்படுவதாக தகவல் கிடைத்தது. அதன்பேரில், சிவகாசி துணை ஆட்சியா் தினேஷ்குமாா் தலைமையில் அலுவலா்கள் திடீரென இருக்கன்குடி சாலையில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, இருக்கன்குடி-கோட்டூா் சாலையில் வந்த 2 லாரிகளை நிறுத்தி சோதனையிட்டனா். அதில், அனுமதியின்றி மணல் ஏற்றி வந்தது தெரியவந்தது.

அதையடுத்து, அந்த இரண்டு லாரிகளையும் பறிமுதல் செய்த துணை ஆட்சியா், லாரி ஓட்டுநா்களான மாரீஸ்வரன், ராஜீவ்காந்தி ஆகியோரை இருக்கன்குடி காவல் நிலையத்தில் ஒப்படைத்தாா். இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து இருவரையும் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.