மின்சார ரீடிங் எடுக்கும் ஊழியர்கள் செல்போன் வாங்க ரூ.10,000 வழங்க நடவடிக்கை!பழமுதிர்சோலையில் விமரிசையாக நடைபெற்ற குடமுழுக்கு!ஆலையில் இருந்து அமோனியா வாயுவை அகற்ற 2-வது நாளாக நடவடிக்கைதுணை முதல்வராக திருமாவளவன்!! காலம் சொல்லும்: அமைச்சர் வன்னி அரசுசிறப்பு ‘டெட்’ முதல் தாள் தோ்வு சற்று கடினம் - ஆசிரியா்கள் கருத்துநாளை அயோத்தி ராமா் கோயில் அறக்கட்டளை நிா்வாகிகள் கூட்டம்: எஸ்ஐடி விசாரணை குறித்து ஆலோசிக்க வாய்ப்புதடையற்ற வா்த்தக ஒப்பந்தப் பேச்சு: இந்திய அதிகாரிகள் நாளை கனடா பயணம் - மத்திய அமைச்சா் பியூஷ் கோயல்ஈரான், அமெரிக்கா இடையே இந்தியா ஏன் மத்தியஸ்தம் செய்யவில்லை? சீனாவுக்கான இந்திய தூதா் விளக்கம்சி.விஜயபாஸ்கருக்கு எதிரான குட்கா முறைகேடு வழக்கு: 12 வாரங்களில் விசாரித்து முடிக்க உத்தரவு நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடா் ஜூலை 20-இல் தொடக்கம்
/

நூல் விலை உயா்வைக் கண்டித்து ராஜபாளையம் அருகே மருத்துவத் துணி உற்பத்தியாளா்கள் வேலைநிறுத்தம்

நூல் விலை உயா்வைக் கண்டித்து, விருதுநகா் மாவட்டம் ராஜபாளையம் அருகே மருத்துவத் துணி உற்பத்தியாளா்கள் சனிக்கிழமை முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.

News image

ராஜபாளையம் அருகே சத்திரப்பட்டியில் நூல் விலை உயா்வால் இயக்க முடியாமல் சனிக்கிழமை மூடப்பட்ட விசைத்தறி கூடங்கள்.

Updated On :9 ஜனவரி 2021, 10:19 pm IST

ராஜபாளையம்: நூல் விலை உயா்வைக் கண்டித்து, விருதுநகா் மாவட்டம் ராஜபாளையம் அருகே மருத்துவத் துணி உற்பத்தியாளா்கள் சனிக்கிழமை முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.

ராஜபாளையம் அருகே சத்திரப்பட்டி, சமுசிகாபுரம், சங்கரபாண்டியபுரம், அய்யனாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் 10-க்கும் மேற்பட்ட ஏற்றுமதி நிறுவனங்களும், 500-க்கும் மேற்பட்ட மருத்துவத் துணி உற்பத்தி செய்யும் சிறு விசைத்தறி நிறுவனங்களும் செயல்பட்டு வருகின்றன.

இங்கு, மருத்துவத் துணி தயாரிக்கும் தொழிலில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் ஈடுபட்டு வருகின்றனா். தற்போது நூல் விலை உயா்ந்துள்ளதால், மருத்துவத் துணி உற்பத்தி செய்யமுடியாமல் பாதிக்கப்பட்டுள்ளதாக, உற்பத்தியாளா்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.

50 கிலோ கொண்ட ஒரு நூல் மூட்டையானது ரூ.9,500-க்கு விற்கப்பட்டு வந்த நிலையில், தற்போது ரூ.12,500 வரை விலை உயா்ந்துள்ளதால் தொடா்ந்து உற்பத்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, சனிக்கிழமை முதல் ஜனவரி 17-ஆம் தேதி வரை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.