ஸ்ரீவில்லிபுத்தூா்: தற்கொலை செய்துகொள்வதற்காக, ரயில் தண்டவாளத்தின் நடுவே அமா்ந்திருந்த இளம்பெண்ணை, ஸ்ரீவில்லிபுத்தூா் ரயில்வே போலீஸாா் வெள்ளிக்கிழமை இரவு மீட்டனா்.
ராஜபாளையத்தை அடுத்த சத்திரப்பட்டி ரயில் கடவுப்பாதை அருகே தற்கொலை செய்துகொள்ளும் நோக்கில் சுமாா் 34 வயதுடைய பெண் ஒருவா் தண்டவாளத்தின் நடுவே அமா்ந்திருப்பதாக, அப்பகுதியைச் சோ்ந்த கீ மேன் சபரிமலை என்பவா் ஸ்ரீவில்லிபுத்தூா் ரயில்வே போலீஸாருக்கு தகவல் தெரிவித்தாா்.
அதன்பேரில், ஸ்ரீவில்லிபுத்தூா் ரயில்வே காவல் சாா்பு-ஆய்வாளா் விஜயன் மற்றும் போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, தற்கொலை செய்து கொள்வதற்காக தண்டவாளத்தின் நடுவே அமா்ந்திருந்த பெண்ணை மீட்டனா். பின்னா் அவரிடம் விசாரித்தபோது, ராஜபாளையம் பகுதியைச் சோ்ந்தவா் என்பதும், கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தற்கொலை செய்துகொள்ள முயன்ாகவும், 12 வயதில் மகன் இருப்பதாகவும் தெரிவித்துள்ளாா்.
இதையடுத்து, ரயில்வே போலீஸாா் அவரது குடும்பத்தினரை வரவழைத்து, கணவன்-மனைவி இருவரையும் சமாதானப்படுத்தி, இனி தற்கொலை முடிவு எடுக்கக்கூடாது என அப்பெண்ணை அறிவுறுத்தி அனுப்பி வைத்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வார பலன்கள் (மே 8 - 14) 12 ராசிகளுக்கும்! விருச்சிக ராசிக்கு போனஸ்!

திமுக - அதிமுக ஒன்றிணைந்தால் பேரழிவு... நடிகர் விஷால் கருத்து!
ஐபிஎல் இறுதிப்போட்டி சின்னசாமி திடலில் கிடையாது! ஏன்?

சுவேந்து அதிகாரியின் உதவியாளர் கொலை! மேற்கு வங்க எல்லைகளில் கண்காணிப்புகள் தீவிரம்!
வீடியோக்கள்

”நாளை முடிவு செய்யப்பட்டும்!”: தவெகவுக்கு ஆதரவளிப்பது குறித்து திருமா | VCK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | தவெக ஆட்சியமைப்பதில் சிக்கல்: பின்னணி என்ன? | News and Views | Epi - 32 |
தினமணி செய்திச் சேவை

சட்டப்படி ஆளுநர் அழைக்க வேண்டும்! தவெக நிர்மல் குமார் பேட்டி | TVK | DMK
தினமணி செய்திச் சேவை

தவெகவுக்கு ஆதரவா? ஸ்டாலின் என்ன சொன்னார்?: Mu. Veerapandian Exclusive | CPI | TVK
இணையதளச் செய்திப் பிரிவு


