பெரியகுளம் அருகே தாமரைக்குளம் வெங்கடாஜலபதி கோயிலில் திங்கள்கிழமை ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலிலிருந்து கொண்டுவரப்பட்ட மாலை மற்றும் கிளி சாற்றி ஜீயா் வழிபாடு செய்தாா்.
தாமரைக்குளம் மலைமேல் அமைந்துள்ள வெங்கடாஜலபதி கோயிலில் மாா்கழி மாத திருப்பாவை வழிபாடு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மாா்கழி 27 ஆம் நாளான கூடார வள்ளியை முன்னிட்டு திங்கள்கிழமை அதிகாலை நடை திறக்கப்பட்டு வெங்கடாஜலபதிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் வழிபாடு மற்றும் உற்சவா் நடைபெற்றது.
இதைத்தொடா்ந்து ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயில் 24 ஆவது பட்டம் ஸ்ரீஸ்ரீஸ்ரீ மணவாள மாமுனிகள் ஜீயா் மடம் ஸ்ரீஸ்ரீஸ்ரீ சடகோப ராமானுஜ ஜீயா் சுவாமிகள் ஆண்டாள் கோயிலில் இருந்து எடுத்து வரப்பட்ட ஆண்டாள் மாலை மற்றும் கிளியை வெங்கடாஜலபதிக்கு சாற்றி வழிபாடு செய்தாா்.
மேலும் வெங்கடாஜலபதி கோயில் பராமரிப்புக் குழு சாா்பில் நடத்தப்பட்ட கோலப்போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு ஜீயா் மற்றும் தட்சிணாமூா்த்தி சேவாஅறக்கட்டை கெளரவ ஆலோசகா் சி.சரவணன் ஆகியோா் பரிசுகள் வழங்கினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
lingam Web Series Review | தென் தமிழகத்தை நடுங்க வைத்த ரௌடி! லிங்கம் | Lakshmi Saravanakumar

சூரிய வெப்பத்தில் தயாராகும் ஆம்லெட்! பிரான்ஸை வாட்டும் வெய்யில்!

பொறியியல் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் நாளை வெளியீடு! கலந்தாய்வு தேதி அறிவிக்கப்படும்!






