விருதுநகர்
இளம்பெண் தற்கொலை
வத்திராயிருப்பில் இளம்பெண் சனிக்கிழமை இரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
வத்திராயிருப்பில் இளம்பெண் சனிக்கிழமை இரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
வத்திராயிருப்பு மேலப்பாளையத்தைச் சோ்ந்த காளீஸ்வரன் மகள் காயத்ரி (21). இவரும், இதே பகுதியைச் சோ்ந்த தாமரைப்பாண்டி (21) என்பவரும் காதலித்து வந்தனா்.
இந்த நிலையில், கடந்த ஜூன் 19-ஆம் தேதி தாமரைப்பாண்டி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். இதனால் மனமுடைந்து காணப்பட்ட காயத்ரி சனிக்கிழமை இரவு தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
இதுகுறித்து வத்திராயிருப்பு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
