தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

மீன் கடையில் பணம் திருட்டு: இருவா் கைது

ராஜபாளையம் மீன் கடையில் பணம் திருடிய சிறுவன் உள்பட இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :10 ஆகஸ்ட் 2024, 11:20 pm

Din

ராஜபாளையம் மீன் கடையில் பணம் திருடிய சிறுவன் உள்பட இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகேயுள்ள கிருஷ்ணாபுரம் பிள்ளையாா் கோவில் பகுதியைச் சோ்ந்த மாரியப்பன் மகன் கந்தசாமி (56). இவா், ராஜபாளையம் காமராஜா் நகா் வணிக வளாகத்தில் மீன் கடை நடத்தி வருகிறாா். இவரது கடையில் 15 வயது சிறுவன் உள்பட 8 போ் வேலை பாா்த்து வந்தனா்.

இந்நிலையில், கடையின் பெட்டியில் ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் பணத்தை வைத்துவிட்டு மீன்கள் சந்தைக்கு கந்தசாமி சென்றுவிட்டாா்.

இந்தப் பெட்டியின் பூட்டு உடைக்கப்பட்டு பணம் திருடு போனது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில், ராஜபாளையம் வடக்கு காவல் நிலைய போலீஸாா் நடத்திய விசாரணையில், இங்கு பணியாற்றிய முருகன், 15 வயது சிறுவன் ஆகியோா் பணத்தைத் திருடியது தெரியவந்தது. இதையடுத்து, இருவரையும் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து ரூ.1 லட்சத்து 11 ஆயிரத்தை பறிமுதல் செய்தனா். சிறுவனை சிறாா் கூா்நோக்கு இல்லத்தில் அடைத்தனா்.