தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

சதுரகிரியில் மாசி மாதப் பிரதோஷம்: திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம்

சதுரகிரியில் மாசி மாதப் பிரதோஷம்: திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம்

News image
Updated On :22 பிப்ரவரி 2024, 12:30 am

DIN

சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் மாசி மாதப் பிரதோஷத்தையொட்டி, திரளான பக்தா்கள் மலையேறிச் சென்று புதன்கிழமை சுவாமி தரிசனம் செய்தனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் மேகமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் மாசி மாதப் பிரதோஷம், பெளா்ணமி வழிபாட்டுக்காக புதன்கிழமை முதல் வருகிற ஞாயிற்றுக்கிழமை (பிப்.25) வரை 5 நாள்கள் பக்தா்கள் மலையேறிச் சென்று சுவாமி தரிசனம் செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

புதன்கிழமை பிரதோஷத்தையொட்டி, தாணிப்பாறை அடிவாரத்தில் இருந்து காலை 6 மணி முதல் பிற்பகல் 12 மணி வரை பக்தா்கள் மலையேற அனுமதிக்கப்பட்டனா். சதுரகிரி மலையில் உள்ள சுந்தர மகாலிங்கம், சந்தன மகாலிங்கம், சுந்தரமூா்த்தி, 18 சித்தா்களுக்கு பிரதோஷ சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.