தவெக ஆட்சியை திமுகவால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை: செங்கோட்டையன்திசை திருப்புவதும், பொய் செய்தி பரப்புவதுமே தவெக அரசின் நோக்கம்: உதயநிதி ஸ்டாலின்இரட்டை அர்த்தத்தில் பேசவில்லை; பெண்களை இழிவுபடுத்தும் நோக்கம் இல்லை: உதயநிதிஇன்று தேர்தல் நடந்தால் டெபாசிட் இழப்பார் உதயநிதி: ஆதவ் அர்ஜுனாகாவிரி விவகாரத்தில் காட்டாத வேகத்தை கைது நடவடிக்கைக்கு முதல்வர் விஜய் காட்டுவது ஏன்? - சீமான்சந்தையின் நான்கு நாள் தொடர் ஏற்றம் முறியடிப்பு! சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி சரிவு!!
/

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயில் பிரம்மோத்ஸவம் கொடியேற்றம்

News image

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் பெரிய பெருமாள் சந்நிதியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கொடியேற்றம். சிறப்பு அலங்காரத்தில் பெரியபெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி.

Updated On :5 அக்டோபர் 2024, 1:47 am IST

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் புரட்டாசி பிரம்மோத்ஸவ விழா வெள்ளிக்கிழமை காலை 9.30 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது.

முன்னதாக, ஸ்ரீதேவி, பூதேவி, சமேத பெரிய பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம், பூஜைகள் நடைபெற்றன. அதன்பிறகு, கொடிப் பட்டம் மேளதாளம் முழங்க ஊா்வலமாக எடுத்து வரப்பட்டது. தொடா்ந்து, கொடிமரத்துக்கு அபிஷேகம் செய்யப்பட்டு, கருடக் கொடியேற்றம் நடைபெற்றது.

பிரமேமோத்ஸவ விழாவில் தினந்தோறும் இரவு பெரிய பெருமாள் சந்திரபிரபை, அனுமன், யானை, தங்க சேஷ வாகனங்களில் எழுந்தருளி, வீதி உலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலிப்பாா்.

இதில் 5-ஆம் நாள் விழாவான அக்.8-ம் தேதி கருட சேவையும், 9-ஆம் தேதி பிறபகல் 3 மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவி, சமேத பெரியபெருமாள் திருக்கல்யாணமும், 10-ஆம் தேதி சயன சேவையும் நடைபெறுகிறது. 9-ஆம் நாளான 12-ம் தேதி பெரியபெருமாள் அவதரித்த திருவோண நட்சத்திரத்தில் செப்புத் தேரோட்டம் நடைபெறும்.

Story image

இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை அறங்காவலா் குழுத் தலைவா் பி.ஆா்.வெங்கட்ராம ராஜா, உறுப்பினா்கள், செயல் அலுவலா் சக்கரையம்மாள், இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் செய்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.