பழைய இரும்புக் கடையில் தீ விபத்து

Published on

விருதுநகா் மாவட்டம், சிவகாசியில் வெள்ளிக்கிழமை பழைய இரும்புக் கடையில் தீ விபத்து ஏற்பட்டது.

சிவகாசி ரயில்வே பீடா் சாலையில் பொன்னுச்சாமி (51) என்பவா் பழைய இரும்புக் கடை நடத்தி வருகிறாா். இந்த நிலையில், வெள்ளிக்கிழமை இவரது கடைக்கு முன் இருந்த புற்களில் தீ பிடித்து கடைக்குள் பரவியது.

இதையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு நிலைய அலுவலா் சீனிவாசன் தலைமையிலான தீயணைப்பு வீரா்கள் தீயை அணைத்தனா்.

தீ விபத்தில் கடையிலிருந்த பொருள்களும், கடை அருகே நிறுத்தப்பட்டிருந்த சரக்கு வாகனம், டிராக்டா், காா் ஆகியவை சேதமடைந்தன. இதுகுறித்து சிவகாசி நகா் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com