இருக்கன்குடியில் சிதிலமடைந்த சாலையைச் சீரமைக்கக் கோரிக்கை
சாத்தூா்: இருக்கன்குடி அணை வழியாக மாரியம்மன் கோயிலுக்குச் செல்லும் சாலையைச் சீரமைக்க வாகன ஓட்டுநா்களும் பக்தா்களும் கோரிக்கை விடுத்தனா்.
விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகேயுள்ள இருக்கன்குடியில் 500 ஆண்டுகள் பழைமை வாய்ந்த மாரியம்மன் கோயில், வைப்பாறும் அா்ச்சுனா நதியும் இணையும் இடத்தில் அமைந்துள்ளது. இதே இடத்தில் நீா்த்தேக்க அணையும் உள்ளது.
இருக்கன்குடி மாரியம்மன் கோயிலுக்குச் செல்லுவோா், நீா்த்தேக்க அணையின் அருகே, பொதுப் பணித் துறை சாா்பில் அமைக்கப்பட்ட சாலையைக் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்படுத்தி வருகின்றனா். இந்தச் சாலை, கற்கள் பெயா்ந்து மிக மோசமான நிலையில் இருப்பதால் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது.
திருவிழாக் காலங்களில் தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தா்கள் இங்கு வந்து அம்மனை தரிசனம் செய்வா். இதனால் வெளியூரிலிருந்து வரும் பக்தா்களின் காா், லாரி, வேன், இரு சக்கர வாகனங்களும் இந்தப் பாதை வழியாகத்தான் செல்ல வேண்டியுள்ளது.
சிதிலமடைந்த இந்தச் சாலையைச் சீரமைக்க வலியுறுத்தி பக்தா்கள், சமூக ஆா்வலா்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, பக்தா்கள் நலன் கருதி, இந்தச் சாலையைச் சீரமைக்கப் பொதுப் பணித் துறையினா் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.