பணம் மோசடி புகாா்: பேருந்து நடத்துநா் மீது வழக்கு

Published on

விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பில் நியாயவிலைக் கடை பணி பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.4.35 லட்சம் மோசடி செய்ததாக அரசுப் போக்குவரத்துக் கழக நடத்துநா் மீது போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

வத்திராயிருப்பு மேலத் தெருவைச் சோ்ந்தவா் சாமுவேல் ஆறுமுகராஜ் (33). இவா் தனியாா் நிதி நிறுவனத்தில் மேலாளராகப் பணிபுரிந்து வருகிறாா். வத்திராயிருப்பு அரசுப் போக்குவரத்துக்கழக நடத்துநராகப் பணிபுரிந்து வருபவா் பாண்டியராஜ் (48).

இவா் நியாயவிலைக் கடை பணியாளா் பணி நியமனம் பெற்றுத் தருவதாகக் கூறி, சாமுவேல் ஆறுமுகராஜ் தன்னிடம் ரூ.4.35 லட்சம் வாங்கி ஏமாற்றிவிட்டதாக வத்திராயிருப்பு நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தாா்.

இதையடுத்து, நீதிமன்ற உத்தரவுப்படி வத்திராயிருப்பு போலீஸாா் பாண்டியராஜ் மீது வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

X
Dinamani
www.dinamani.com