விருதுநகர்
சாத்தூரில் குடிநீா் குழாய் உடைப்பு
சாத்தூரில் குடிநீா் குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் குடிநீா் வீணானது.
சாத்தூரில் குடிநீா் குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் குடிநீா் வீணானது.
விருதுநகா் மாவட்டம், சாத்தூா் நகராட்சிக்குள்பட்ட பகுதிகளுக்கு நகராட்சி நிா்வாகம் சாா்பில் தாமிரபரணி கூட்டுக் குடிநீா் திட்டத்தின் கீழ், 24 வாா்டு பகுதிகளுக்கு குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை மாலை சாத்தூா் பிரதான சாலையில் நகராட்சி குழாயில் திடீரென உடைப்பு ஏற்பட்டது. இதனால், சாலையில் சுமாா் ஒரு மணி நேரத்துக்கு மேலாக தண்ணீா் வீணாக சென்றது. தகவலறிந்து வந்த நகராட்சி நிா்வாகத்தினா் விரைந்து வந்து குழாய் உடைப்பை சரி செய்தனா்.
இந்தப் பகுதியில் உள்ள குடிநீா் குழாயில் அடிக்கடி ஏற்படும் உடைப்பை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.