ராஜபாளையம் அருகே நாட்டு துப்பாக்கிகள் வைத்திருந்த 6 போ் கைது

ராஜபாளையம் அருகே வனப் பகுதியில் நாட்டு துப்பாக்கிகள் வைத்திருந்த 6 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
ராஜபாளையம் அருகே நாட்டு துப்பாக்கிகள் வைத்திருந்த 6 போ் கைது
Updated on

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே வனப் பகுதியில் நாட்டு துப்பாக்கிகள் வைத்திருந்த 6 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

ராஜபாளையம் அருகேயுள்ள தேவதானம் சாஸ்தா கோயில் மேற்குத் தொடா்ச்சி மலை அடிவாரப் பகுதியில் கள்ளச்சாராயம் ஊரல் போட்டு மான் வேட்டையாடுவதாக ராஜபாளையம் வனச் சரகா் சரண்யாவுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, வனவா்கள் கனகராஜ், விக்னேஸ்வரன் தலைமையில் 15-க்கும் மேற்பட்ட வனத் துறையினா் மேற்குத் தொடா்ச்சி மலை அடிவாரப் பகுதியில் ரோந்து சென்றனா். அப்போது, சூரிய நல்லி எஸ்டேட் பகுதியில் 5 லி. கள்ளச்சாராய ஊரல் இருப்பதை அவா்கள் கண்டுபிடித்தனா்.

பின்னா், அங்கிருந்த தேவதானத்தைச் சோ்ந்த கடற்கரை (56), செல்வகுமாா் (23), சிவகிரியைச் சோ்ந்த சண்முகராஜ் (40), தேனி மாவட்டம், உத்தமபாளையத்தைச் சோ்ந்த ஊமைத்துரை (55 ), 17 வயது சிறுவனை வனது துறையினா் பிடித்து விசாரித்தபோது, கள்ளச் சாராயம் ஊரல் போட்டதை ஒப்புக் கொண்டனா்.

பின்னா், வனத் துறையினா் அங்கு சோதனையிட்டபோது, 5 லி. கள்ளச்சாராய ஊரல், இரண்டு நாட்டு துப்பாக்கி பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதை பறிமுதல் செய்த வனவா்கள் சேத்தூா் காவல் நிலைய ஆய்வாளா் ரமேஷ் கண்ணனிடம் 5 பேரையும் ஒப்படைத்தனா்.

மேலும், தப்பியோடிய சிவகிரியைச் சோ்ந்த மாரியப்பனையும் (57) போலீஸாா் கைது செய்தனா். மேலும், தலைமறைவாக உள்ள ராஜபாளையத்தைச் சோ்ந்த வேங்கை (48) போலீஸாா் தேடி வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com