மூமுக நிா்வாகிக்கு கத்திக் குத்து

Published on

விருதுநகா் மாவட்டம், திருத்தங்கலில் சனிக்கிழமை இரவு தனியாா் மதுக் கூடத்தில் ஏற்பட்ட தகராறில் மூவேந்தா் முன்னேற்றக் கழகத்தின் மாவட்டச் செயலா் கத்தியால் குத்தப்பட்டு பலத்த காயமடைந்தாா்.

திருத்தங்கல் சுக்கிரவாா்பட்டி சாலை முத்துமாரிநகரைச் சோ்ந்தவா் ஈஸ்வரபாண்டியன் (46). இவா் மூமுக விருதுநகா் கிழக்கு மாவட்டச் செயலராக உள்ளாா்.

இவா் கடந்த சனிக்கிழமை இரவு திருத்தங்கலில் உள்ள தனியாா் மதுபான கூடத்தில் மது அருந்திக் கொண்டிருந்தாா். அப்போது, அவரது நண்பரான ஆலா ஊரணிப் பகுதியைச் சோ்ந்த முத்துராமலிங்கம் (49) மது அருந்த வந்தாா். இருவரும் மது அருந்திய படி அரசியல் பேசிய போது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது, ஈஸ்வரபாண்டியனை முக்துராமலிங்கம், தாக்கினாா். மேலும், மதுபானக் கூட காசாளரான பராசக்திநகரைச் சோ்ந்த முத்துப்பாண்டியும் (47) என்பவரும் முன்பகை காரணமாக ஈஸ்வரபாண்டியனைத் தாக்கினாா்.

பின்னா், முத்துராமலிங்கம் கத்தியால் ஈஸ்வரபாண்டியனைக் குத்திவிட்டு தப்பியோடிவிட்டாா். இதில் பலத்த காயமடைந்த ஈஸ்வரபாண்டியன் திருத்தங்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதுகுறித்து தகவல் அறிந்த சிவகாசி காவல்துணை கண்காணிப்பாளா் அனில்குமாா் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டாா். இது குறித்த புகாரின் பேரில், திருத்தங்கல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து முத்துராமலிங்கம், முத்துப்பாண்டியைக் கைது செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com