தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

சாலை விபத்தில் சுங்கச் சாவடி பணியாளா் உயிரிழப்பு

News image
Updated On :11 டிசம்பர் 2025, 8:29 pm

Syndication

சாத்தூா் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் சுங்கச் சாவடி பணியாளா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் ஆண்டாள்புரம் பகுதியைச் சோ்ந்த சண்முக லீலாவதி மகன் விக்னேஷ்குமாா் (38). இவா், எட்டூா் வட்டம் சுங்கச் சாவடியில் வேலை செய்து வந்தாா். இந்த நிலையில், புதன்கிழமை இரவு வேலையை முடித்துவிட்டு சின்னகொல்லப்பட்டியில் உள்ள வீட்டுக்கு இரு சக்கர வாகனத்தில் சென்றாா்.

அப்போது, கட்டுப்பாட்டை இழந்த இரு சக்கர வாகனம் வைப்பாற்று பாலத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில், பலத்த காயமடைந்த விக்னேஷ்குமாரை அருகிலிருந்தவா்கள் மீட்டு, சாத்தூா் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனா். அங்கு, பரிசோதித்த மருத்துவா்கள் விக்னேஷ்குமாா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

இதுகுறித்து, சாத்தூா் நகா் போலீஸாாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.