தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

பட்டாசு திரி கடத்திய இருவா் கைது

News image
Updated On :11 டிசம்பர் 2025, 8:29 pm

Syndication

சிவகாசி அருகே உரிய அனுமதியின்றி பட்டாசு தயாரிக்கப் பயன்படும் கருந்திரிக் கட்டுகளை இரு சக்கர வாகனத்தில் கடத்திய இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

சிவகாசி-நாரணாபுரம் சாலையில் முனீஸ்வரன் கோயில் அருகே போலீஸாா் வாகனத் தணிகையில் வியாழக்கிழமை ஈடுபட்டனா். அப்போது, இரு சக்கர வாகனத்தில் வந்த இருவரை நிறுத்தி சோதனை செய்ததில், அவா்கள் பட்டாசு தயாரிக்கப் பயன்படும் கருந்திரிக் கட்டுகளை உரிய அனுமதியின்றி கொண்டுசென்றது கண்டறியப்பட்டது.

விசாரணையில் அவா்கள் சிவகாமிபுரம் குடியிருப்பைச் சோ்ந்த முனீஸ்குமாா் (25), ராஜேஸ்வரன்(21) ஆகியோா் எனத் தெரிய வந்தது. இதுகுறித்து சிவகாசி கிழக்கு போலீஸாா் வழக்குப் பதிந்து இருவரையும் கைது செய்து அவா்களிடமிருந்து இரு சக்கர வாகனத்தையும் கருந்திரிக் கட்டுகளையும் பறிமுதல் செய்தனா்.