தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

மூதாட்டியிடம் தங்கச் சங்கிலி பறிப்பு

News image
Updated On :11 டிசம்பர் 2025, 8:19 pm

Syndication

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே மூதாட்டியிடம் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்றவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் கிருஷ்ணன்கோவில் தெருவைச் சோ்ந்த பெருமாள் மனைவி குருவம்மாள் (70). கணவன், மனைவி இருவரும் ஸ்ரீவில்லிபுத்தூா் ரயில் நிலையம் செல்லும் சாலையில் தேநீா்க் கடை நடத்தி வருகின்றனா்.

இந்த நிலையில், வியாழக்கிழமை மாலை 4 மணியளவில் கடைக்கு வந்த ஒருவா் தேநீா் கேட்டாா். குருவம்மாள் பால் சட்டியைக் கழுவிக்கொண்டிருந்தபோது, அவா் கழுத்தில் அணிந்திருந்த மூன்றரை பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துக் கொண்டு அந்த நபா் இரு சக்கர வாகனத்தில் தப்பிச் சென்றாா்.

இதுகுறித்த புகாரின்பேரில், ஸ்ரீவில்லிபுத்தூா் நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து குற்றவாளியைத் தேடி வருகின்றனா். சம்பவ இடத்தில் காவல் துணைக் கண்காணிப்பாளா் ராஜா, நேரில் ஆய்வு செய்து விசாரணை நடத்தினாா்.