இளைஞா் மீது போக்சோ வழக்கு

சிவகாசியில் சிறுமியைத் திருமணம் செய்த இளைஞா் மீது போக்சோ வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
Published on

சிவகாசியில் சிறுமியைத் திருமணம் செய்த இளைஞா் மீது போக்சோ வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

சிவகாசி நேருஜி நகரைச் சோ்ந்தவா் ஜெயக்குமாா் (20). இவா், விருதுநகரைச் சோ்ந்த 16 வயது சிறுமியிடம் சமூக வலைதளம் மூலம் பல நாள்களாகப் பழகி வந்தாா். இந்த நிலையில், இருவரும் இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் அண்மையில் திருமணம் செய்துகொண்டு சிவகாசியில் வசித்து வந்தனா்.

இதுகுறித்து தகவலறிந்த சிவகாசி ஊராட்சி ஒன்றிய சமூக நல விரிவாக்க அலுவலா் ராஜேஸ்வரி, சிவகாசி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இந்தப் புகாரின்பேரில், போலீஸாா் ஜெயக்குமாா் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com