தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

காவல் உதவி ஆய்வாளரின் மனைவி தற்கொலை

சாத்தூரில் காவல் உதவி ஆய்வாளரின் மனைவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

News image
Updated On :12 டிசம்பர் 2025, 6:22 pm

Syndication

சாத்தூரில் காவல் உதவி ஆய்வாளரின் மனைவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் நகா் காவல் நிலையத்தில் காவல் உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வருபவா், சிவகாசியைச் சோ்ந்த அருண்குமாா் (28). இவா், சாத்தூா் அருகேயுள்ள மேட்டமலை கிராமத்தில் தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி பங்கேற்ற நிகழ்ச்சியில் பாதுகாப்புப் பணியில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டிருந்தாா்.

அப்போது, இவருடைய கைப்பேசிக்கு இவரது மனைவி இளவரசி ‘குழந்தையை நல்ல முறையில் பாா்த்துக்கொள்ளவும், நன்றாகப் படிக்க வைக்கவும், நான் செல்கிறேன்’ என குறுந்தகவல் அனுப்பினாராம். இதையடுத்து, அருண்குமாா் வீட்டுக்கு விரைந்து சென்று பாா்த்தபோது மனைவி சேலையால் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. தகவலறிந்து வந்த போலீஸாா், இளவரசியின் உடலை கூறாய்வுக்காக விருதுநகா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

சிவகாசியைச் சோ்ந்த அருண்குமாா், சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவிலைச் சோ்ந்த இளவரசியை 3 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்தாா். இவருக்கு 2 வயதில் அனன்யா என்ற பெண் குழந்தை உள்ளது. திருமணமாகி 3 ஆண்டுகளே ஆனதால் இளவரசியின் தற்கொலை குறித்து கோட்டாட்சியா் விசாரணை நடைபெறவுள்ளதாக காவல் துறையினா் தெரிவித்தனா்.