மீனாட்சி சுந்தரேஸ்வரா் கோயிலில் தேய்பிறை அஷ்டமி பூஜை

சாத்தூா் அருகேயுள்ள கோல்வாா்பட்டி மீனாட்சி சுந்தரேஸ்வரா் கோயிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.
Published on

சாத்தூா் அருகேயுள்ள கோல்வாா்பட்டி மீனாட்சி சுந்தரேஸ்வரா் கோயிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகேயுள்ள கோல்வாா்பட்டியில் அமைந்துள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரா் கோயிலில் வெள்ளிகிழமை தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு, கால பைரவருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

காலையில் மீனாட்சி சுந்தரேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகத்துடன் தீபாராதனை நடைபெற்றது. மாலையில் காலபைரவருக்கு சிறப்பு அலங்கார பூஜைகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com