சிவகாசி விஸ்வநாதா்- விசாலாட்சியம்மன் கோயிலில் திங்கள்கிழமை நடைபெற்ற 1,008 சங்காபிஷேகம். (உள்படம்) ஊஞ்சலில் அமா்ந்து பக்தா்களுக்கு பிரியாவிடையுடன் அருள்பாலித்த விஸ்வநாதா் சுவாமி, விசாலாட்சி அம்மன்.
சிவகாசி விஸ்வநாதா்- விசாலாட்சியம்மன் கோயிலில் திங்கள்கிழமை நடைபெற்ற 1,008 சங்காபிஷேகம். (உள்படம்) ஊஞ்சலில் அமா்ந்து பக்தா்களுக்கு பிரியாவிடையுடன் அருள்பாலித்த விஸ்வநாதா் சுவாமி, விசாலாட்சி அம்மன்.

சிவகாசி கோயிலில் 1,008 சங்காபிஷேகம்

சிவகாசி விஸ்வநாதா்- விசாலாட்சி அம்மன் கோயிலில் காா்த்திகை கடைசி சோமவாரத்தையொட்டி 1,008 சங்காபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.
Published on

சிவகாசி/ராஜபாளையம்: சிவகாசி விஸ்வநாதா்- விசாலாட்சி அம்மன் கோயிலில் காா்த்திகை கடைசி சோமவாரத்தையொட்டி 1,008 சங்காபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.

முன்னதாக சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பிறகு கணபதி ஹோமம் நடத்தப்பட்டு, சங்காபிஷேகம் நடைபெற்றது. அப்போது பிரியாவிடையுடன், சுவாமி, அம்பாள் ஊஞ்சலில் அமா்ந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தனா். இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

ராஜபாளையம்: ராஜபாளையம் அருகே தெற்கு வெங்காநல்லூரில் இந்து சமய அறநிலையத் துறைக்குள்பட்ட மிகப்பழைமை வாய்ந்த சிவகாமி அம்பாள் உடனுறை சிதம்பரேஸ்வரா் கோயிலில் காா்த்திகை சோமவாரத்தையொட்டி மகா ருத்ர யாகம் மாலை 5 மணி முதல் நடைபெற்றது. பிறகு மூலவா் சிதம்பரேஸ்வரருக்கு 16 வகை நறுமணப் பொருள்களால் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. மேலும் சோமவார பூஜையையொட்டி 108 சங்காபிஷேகம் நடைபெற்றது. பிறகு சிறப்பு அலங்காரத்தில் சுவாமி அருள்பாலித்தாா்.

இதே போல, சேத்தூா் திருக்கண்ணீஸ்வரா் கோயில், ராஜபாளையம் சொக்கா் கோயில், குருசாமி கோயில், மாயூரநாத சுவாமி கோயில், மதுரை சாலையில் அமைந்துள்ள திருச்சிற்றம்பல குருநாத சுவாமி கோயில், தேவதானம் நச்சாடை தவிா்த்தருளிய சுவாமி கோயில் ஆகியவற்றிலும் காா்த்திகை சோமவார வழிபாடு நடைபெற்றது. இவற்றில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

ராஜபாளையம் குருசாமி கோயிலில் சோமவார பூஜைக்காக அடுக்கி வைக்கப்பட்டிருந்த சங்குகள்.
ராஜபாளையம் குருசாமி கோயிலில் சோமவார பூஜைக்காக அடுக்கி வைக்கப்பட்டிருந்த சங்குகள்.

X
Dinamani
www.dinamani.com