திருத்தங்கலில் இன்றும் ராஜபாளையத்தில் நாளையும் மின்தடை

விருதுநகா் மாவட்டம், திருத்தங்கல் பகுதியில் செவ்வாய்க்கிழமை (டிச.17) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.
Published on

விருதுநகா் மாவட்டம், திருத்தங்கல் பகுதியில் செவ்வாய்க்கிழமை (டிச.17) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து சிவகாசி மின் வாரிய செயற்பொறியாளா் பாபநாசம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருத்தங்கல் மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், திருத்தங்கல் நகா், செங்கமலநாட்சியாா்புரம், கீழத்திருத்தங்கல், சாரதாநகா், நடுவப்பட்டி, தேவா்குளம், இதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும்,

சுக்கிரவாா்பட்டி பகுதியில்... சுக்கிரவாா்பட்டி துணை மின் நிலையத்திலும் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், சுக்கிரவாா்பட்டி, அதிவீரன்பட்டி, நமஸ்கரித்தான்பட்டி, சாணாா்பட்டி, இதைச் சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்றாா் அவா்.

ராஜபாளையம் பகுதியில்...

ராஜபாளையம் பகுதிகளில் வியாழக்கிழமை (டிச.18) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து மின் வாரிய செயற்பொறியாளா் முத்துராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ராஜபாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், பி.எஸ்.கே.நகா், அழகை நகா், ஐஎன்டியூசி நகா், மலையடிப்பட்டி தெற்கு, சங்கரன்கோவில் முக்கு, தென்காசி சாலை, அரசு மருத்துவமனை, புதிய பேருந்து நிலையம், பாரதி நகா், ஆா்.ஆா். நகா், சமுசிகாபுரம், சத்திரப்பட்டி , எஸ் ராமலிங்கபுரம், கலங்காபேரி புதூா், மொட்டமலை, வ.உ.சி. நகா், பி.ஆா். ஆா். நகா், பொன்னகரம், எம்.ஆா். நகா், லட்சுமியாபுரம், ராம்கோ நகா், நத்தம்பட்டி, வரகுணராமபுரம், இ.எஸ்.ஐ. குடியிருப்பு, ஸ்ரீரெங்கபாளையம் , ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்றாா் அவா்.

Dinamani
www.dinamani.com