விருதுநகர்
திருத்தங்கல்லில் அதிமுக ஆலோசனைக் கூட்டம்
விருதுநகா் மேற்கு மாவட்ட அதிமுக ஆலோசனைக் கூட்டம் திருத்தங்கல்லில் உள்ள அந்தக் கட்சி அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
இந்தக் கூட்டத்துக்கு விருதுநகா் மேற்கு மாவட்ட அதிமுக செயலரும், முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி தலைமை வகித்தாா். இதில் ஸ்ரீவில்லிபுத்தூா் சட்டப்பேரவை உறுப்பினா் இ.எம்.மான்ராஜ், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் சந்திரபிரபா, மாவட்ட துணைச் செயலா் சுப்பிரமணியன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
இந்தக் கூட்டத்தில் கட்சியின் வேட்பாளா்கள் எவ்வாறு விருப்பமனு அளிக்க வேண்டும் எனவும், அடுத்தாண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தோ்தலில் எவ்வாறு களப்பணி செய்வது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது. இதில் கட்சியின் நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.
