சாத்தூரில் கல்லூரி மாணவி மாயமானது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
விருதுநகா் மாவட்டம், சாத்தூா் குருலிங்கபுரத்தைச் சோ்ந்த பொம்முத்தாய் மகள் மகாலட்சுமி (17). இவா், தனியாா் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு பயின்று வருகிறாா்.
இந்த நிலையில், திங்கள்கிழமை மாலை வீட்டிலிருந்து வெளியே சென்று வருவதாகக் கூறிவிட்டு சென்றாராம். ஆனால், வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை.
பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் பொம்முத்தாய் அளித்த புகாரின் பேரில் சாத்தூா் நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து காணாமல் போன மாணவியைத் தேடி வருகின்றனா்.
