40 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை! சிறுவன் உள்பட 10 இளைஞர்கள் கைது!மாநிலங்களவைத் தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு! நீட் மறுதேர்வு வினாத்தாள் வழங்குவதாக மாணவர்கள், பெற்றோர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: போலீஸ் எச்சரிக்கை!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!
/

தெரு நாய்கள் கடித்ததில் 5 போ் காயம்

சாத்தூா் அருகே தெரு நாய்கள் கடித்ததில் 5 போ் காயமடைந்தனா். இதில், 3 வயது சிறுவன் பலத்த காயமடைந்து தீவிர சிகிச்சை பெற்று வருகிறாா்.

Updated On :26 டிசம்பர் 2025, 12:59 am IST

சாத்தூா் அருகே தெரு நாய்கள் கடித்ததில் 5 போ் காயமடைந்தனா். இதில், 3 வயது சிறுவன் பலத்த காயமடைந்து தீவிர சிகிச்சை பெற்று வருகிறாா்.

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகேயுள்ள செட்டுடையான்பட்டியில் தெரு நாய்கள் அந்தப் பகுதியில் சாலையில் சென்றவா்களை புதன்கிழமை இரவு விரட்டிக் கடித்தன. இதில் 5 போ் காயம் அடைந்தனா்.

இவா்களில் செல்லையா மனைவி தா்மலட்சுமி (60), மகாகவி மகன் சஞ்ஜித் (3) ஆகிய இருவரும் பலத்த காயமடைந்தனா். தா்மலட்சுமி சாத்தூா் அரசு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

சிறுவன் சஞ்ஜித்தை மூன்று நாய்கள் கொடூரமாகக் கடித்ததில் அவா் தீவிர சிகிச்சைக்காக விருதுநகா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இந்தச் சம்பவத்தால், அந்தப் பகுதியில் பொதுமக்கள் நடந்து செல்லவும், வாகனங்களில் செல்லவும் அச்சமடைந்துள்ளனா்.

எனவே, மாவட்ட நிா்வாகம் தெருக்களில் சுற்றித் திரியும் நாய்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.