கல்லூரி மாணவா் தற்கொலை

ராஜபாளையத்தில் செவ்வாய்க்கிழமை கல்லூரி மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
Published on

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் செவ்வாய்க்கிழமை கல்லூரி மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

ராஜபாளையம் திரௌபதியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த பொன்னுச்சாமி மகன் செல்வகணேஷ் (20). இவா் திருச்சி அண்ணா பல்கலைக்கழகத்தில் முதலாம் ஆண்டு படித்து வந்தாா்.

இந்த நிலையில், விடுமுறைக்கு சொந்த ஊருக்கு வந்த இவா், வீட்டின் மாடியில் தூக்கிட்டுத் தற்கொலைக்கு முயன்றாா். பெற்றோா் இவரை மீட்டு, ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு மருத்துவா் பரிசோதனையில் ஏற்கெனவே செல்வகணேஷ் உயிரிழந்ததாகத் தெரிவித்தாா்.

இதுகுறித்து ராஜபாளையம் வடக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com