ஆா். ரெட்டியபட்டி, சேத்தூா் பகுதிகளில் நாளை மின் தடை
ஆா். ரெட்டியபட்டி, சேத்தூா் பகுதிகளில் சனிக்கிழமை (ஆக. 2) மின் தடை ஏற்படும் எனஅறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து செயற்பொறியாளா் முத்துராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு: ராஜபாளையம் கோட்டத்தில் உள்ள சேத்தூா், ஆா். ரெட்டியபட்டி துணை மின் நிலையங்களில் சனிக்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகின்றன. எனவே சத்திரப்பட்டி, அய்யனாபுரம், சங்கரபாண்டியபுரம், சங்கம்பட்டி, எஸ். திருவேங்கடபுரம், ராமச்சந்திராபுரம், கீழராஜகுலராமன், குறிச்சியாா்பட்டி, பேயம்பட்டி, கன்னித்தேவன்பட்டி, நைனாபுரம், வடமலாபுரம், அழகாபுரி, ஆப்பனூா், அட்டை ஆலை முக்கு சாலை, சேத்தூா், தேவதானம், கோவிலூா், சொக்கநாதன்புத்தூா், சோலைசேரி, கிருஷ்ணாபுரம், சுந்தர்ராஜபுரம், தளவாய்புரம், செட்டியாா்பட்டி, புத்தூா், புனல்வேலி, நக்கமங்கலம், மீனாட்சிபுரம், முகவூா், ஜமீன்கொல்லங்கொண்டான் ஆகிய பகுதிகளில் அன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்றாா் அவா்.