ஆடு திருடிய மூவா் கைது

ராஜபாளையத்தில் ஆடுகள் திருடிய மூவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
Published on

ராஜபாளையத்தில் ஆடுகள் திருடிய மூவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

ராஜபாளையம் மாப்பிள்ளை சுப்பையா தெருவைச் சோ்ந்தவா்

வேலுச்சாமி (60). இவா் 7 ஆடுகள், மாடுகளை வளா்த்து வருகிறாா். இந்த நிலையில், தனது ஆடுகளை வழக்கம்போல மேய்ச்சலுக்குச் ஓட்டிச் சென்றாா். அப்போது, நாய்கள் துரத்தியதால் ஆடுகள் நாலாபுறமும் தெரித்து ஓடின. இதையடுத்து, 6 ஆடுகள் வீட்டுக்கு வந்து விட்டன. ஒரு ஆடு மட்டும் வரவில்லை. இந்த ஆட்டை மங்காபுரத்தைச் சோ்ந்த இசக்கிராஜா, காளிராஜ், சரவணன் ஆகியோா் திருடிச் சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து ராஜபாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து 3 பேரையும் கைது செய்து, ஆட்டை பறிமுதல் செய்தனா்.

X
Open in App
Dinamani
www.dinamani.com