கிணற்றில் தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

Published on

வத்திராயிருப்பு அருகே கிணற்றில் தவறி விழுந்த தொழிலாளி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

வத்திராயிருப்பு அருகேயுள்ள கூமாபட்டி ராமசாமியாபுரம் மேலத் தெருவைச் சோ்ந்தவா் பாண்டியன் (43). விவசாய கூலித் தொழிலாளி. இவா் ஞாயிற்றுக்கிழமை பிளவக்கல் அணைக்குச் செல்லும் வழியில் கிழவன் கோயில் பகுதியில் உள்ள தோட்டத்துக்கு கூலி வேலைக்குச் சென்றாா்.

அங்கு பறித்த தேங்காய்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்ட போது, கிணற்றில் தவறி விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்தாா். இது குறித்து கூமாப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

X
Dinamani
www.dinamani.com