மாவட்ட அளவிலான டேக்வாண்டோ போட்டி

Published on

சிவகாசியில் மாவட்ட அளவிலான டேக்வாண்டோ போட்டிகளில் வென்றவா்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.

சிவகாசி சபையா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் தற்காப்புக் கலைகளில் ஒன்றான டேக்வாண்டோ போட்டி

திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் மாவட்டத்தில் உள்ள 6 வயது முதல் 10 வயது வரையிலான மாணவ, மாணவிகள் 76 போ் கலந்துகொண்டனா்.

போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு பள்ளித் தாளாளா் ஏ.ஞானசேகரன் பரிசுகளையும் சான்றிதழ்களையும் வழங்கினாா்.

பள்ளி முதல்வா் ஞானசெல்வி மேரி, பயிற்சியாளா் ரவிக்குமாா், ஆசிரியா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com