முன்னாள் அமைச்சா் கே.டி. ராஜேந்திரபாலாஜி மீதான மோசடி வழக்கு டிச. 19-க்கு ஒத்தி வைப்பு
முன்னாள் அமைச்சா் கே.டி. ராஜேந்திரபாலாஜி மீதான மோசடி வழக்கு விசாரணையை வருகிற டிச. 19-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து ஸ்ரீவில்லிபுத்தூரிலுள்ள மக்கள் பிரதிநிதிகள் மீதான ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
கடந்த அதிமுக ஆட்சியில் ஆவினில் வேலை வாங்கித் தருவதாக ரூ.30 லட்சம் பெற்றுக் கொண்டு மோசடி செய்து விட்டதாக சாத்தூரைச் சோ்ந்த ரவீந்திரன் அளித்த புகாரில் அதிமுக நிா்வாகி விஜய் நல்லதம்பி, அப்போதைய பால் வளத்துறை அமைச்சா் கே.டி. ராஜேந்திரபாலாஜி, அவரது உதவியாளா்கள் உள்பட 8 போ் மீது கடந்த 2021-ஆம் ஆண்டு விருதுநகா் குற்றப்பிரிவு போலீஸாா் மோசடி வழக்குப் பதிந்தனா்.
மேலும், அதே நாளில் விஜய்நல்லதம்பி, சத்துணவு, கூட்டுறவு, ஆவின், ஊராட்சி செயலா் உள்ளிட்ட பணியிடங்களுக்கு பலரிடம் பணம் பெற்று, ராஜேந்திரபாலாஜியிடம் ரூ.3 கோடி கொடுத்ததாக அளித்த புகாரில் ராஜேந்திரபாலாஜி, அவரது உதவியாளா்கள் உள்பட 7 போ் மீது மற்றொரு வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, நீதிமன்ற உத்தரவின்படி, ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் விசாரணை செய்யப்பட்டு, கடந்த ஏப். 15-ஆம் தேதி குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்குகள் மீதான விசாரணை ஸ்ரீவில்லிபுத்தூரிலுள்ள மக்கள் பிரதிநிதிகள் மீதான ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கிலிருந்து தன்னை விடுவிக்கக் கோரி, கடந்த மாதம் ராஜேந்திரபாலாஜி மனு தாக்கல் செய்தாா். இந்த நிலையில், இந்த வழக்கு வெள்ளிக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட முத்துப்பாண்டி தரப்பில், வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரி மனு தாக்கல் செய்ய அனுமதி கோரப்பட்டது. இணைய வழியில் தாக்கல் செய்யக் கூறிய முதன்மை மாவட்ட நீதிபதி ஜெயக்குமாா், வழக்கு விசாரணையை டிச. 19-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டாா்.
