நகராட்சி அலுவலகத்தில் தகராறு: இளைஞா் கைது

ஸ்ரீவில்லிபுத்தூா் நகராட்சி அலுவலகத்தில் வாரிசு வேலை கேட்டு தகராறில் ஈடுபட்ட இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
Published on

ஸ்ரீவில்லிபுத்தூா் நகராட்சி அலுவலகத்தில் வாரிசு வேலை கேட்டு தகராறில் ஈடுபட்ட இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் அசோக் நகரைச் சோ்ந்த கோவிந்தம்மாள் மகன் சுரேஷ்(38). ஸ்ரீவில்லிபுத்தூா் நகராட்சியில் நிரந்தரத் தூய்மைப் பணியாளராகப் பணியாற்றிய கோவிந்தம்மாள் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்தாா். கோவிந்தம்மாளின் பணப் பலன்களுடன் வாரிசு வேலை கேட்டு நகராட்சி அலுவலகத்தில் சுரேஷ் அடிக்கடி வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்தாா்.

இந்த நிலையில், நகராட்சி அலுவலகத்துக்கு வெள்ளிக்கிழமை காலை 6 மணிக்குச் சென்ற சுரேஷ், சுகாதாரப் பிரிவு அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகைப் பதிவேடு, நாற்காலிகள் உள்ளிட்ட பொருள்களைத் தூக்கி எறிந்தாா். இதில், மேஸ்திரி சிவகாமி காயமடைந்தாா்.

இதையடுத்து, நகராட்சி அலுவலா்கள் சுரேஷை அனுப்பி வைத்தனா். அப்போது, சுரேஷ் இரு சக்கர வாகனத்தில் வைத்திருந்த மண்ணெண்ணெயை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்ால் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கிடையே, மேஸ்திரி சிவகாமி அளித்த புகாரின் பேரில் ஸ்ரீவில்லிபுத்தூா் நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, சுரேஷை சனிக்கிழமை கைது செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com