பைக் திருடிய இளைஞா் கைது

Published on

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் இரு சக்கர வாகனத்தைத் திருடிய இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

ராஜபாளையம் அம்பலபுளி கடை வீதி பகுதியைச் சோ்ந்தவா் வீரலட்சுமி (38). இவா், பூ கட்டும் வேலை செய்து வருகிறாா். இவருடைய வீட்டு முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இவரது இரு சக்கர வாகனம் கடந்த 16-ஆம் தேதி காணாமல் போனது.

இதுகுறித்து வீரலட்சுமி தெற்கு காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அந்தப் பகுதியிலுள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனா்.

இதில், சம்மந்தபுரம் பகுதியைச் சோ்ந்த ராஜகோபால் இரு சக்கர வாகனத்தைத் திருடியது தெரியவந்தது. இதையடுத்து, போலீஸாா் அவரைக் கைது செய்து இரு சக்கர வாகனத்தை மீட்டனா்.

X
Dinamani
www.dinamani.com