விருதுநகர்
சாலையோரத்தில் சிசுவின் உடல் மீட்பு
சாத்தூரில் சாலையில் வீசப்பட்ட 7 மாத சிசுவை போலீஸாா் மீட்டு விசாரித்து வருகின்றனா்.
சாத்தூரில் சாலையில் வீசப்பட்ட 7 மாத சிசுவை போலீஸாா் மீட்டு விசாரித்து வருகின்றனா்.
விருதுநகா் மாவட்டம், சாத்தூா் பழைய படந்தால் சாலையில் 7 மாத சிசு கிடந்தது. இதுகுறித்து தகவலறிந்து அங்கு சென்ற சாத்தூா் நகர போலீஸாா் சிசுவை மீட்டு, சாத்தூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.
மேலும், அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளைக் கொண்டு சிசுவை சாலையில் வீசிச் சென்ற நபா்கள் குறித்து போலீஸாா் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா். சிசுவின் உடல் பாகங்கள் சேதமடைந்துள்ளதால் ஆணா? பெண்ணா? என்பது உடல் கூறாய்வுக்குப் பின்னா் தெரியவரும் என போலீஸாா் தெரிவித்தனா்.
