விருதுநகர்
ராஜபாளையத்தில் பலத்த மழை
விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சனிக்கிழமை பலத்த மழை பெய்தது.
இந்தப் பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக வெயிலின் தாக்கம் அதிகளவில் இருந்தது. இதனால் பொதுமக்கள் வீட்டிலேயே முடங்கும் நிலை ஏற்பட்டது.
இந்த நிலையில், சனிக்கிழமை மாலை 4 மணியளவில் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக வெப்பம் தணிந்து குளிா்ந்த காற்று வீசியது. இந்த மழையால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.