அறுப்பின் ஸ்தோத்திரப் பண்டிகை கொடியேற்றத்துடன் தொடக்கம்

அறுப்பின் ஸ்தோத்திரப் பண்டிகை கொடியேற்றத்துடன் தொடக்கம்

ஸ்ரீவில்லிபுத்தூா் சி.எஸ்.ஐ. தூய தோமா தேவாலயத்தில் அறுப்பின் ஸ்தோத்திரப் பண்டிகை வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
Published on

ஸ்ரீவில்லிபுத்தூா் சி.எஸ்.ஐ. தூய தோமா தேவாலயத்தில் அறுப்பின் ஸ்தோத்திரப் பண்டிகை வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இந்தப் பண்டிகை குருசேகரத் தலைவா், சபை குரு பால் தினகரன் தலைமையில் சிலுவைக் கொடியேற்றம் நடைபெற்றது. சிறப்புப் பாடல்கள் பாடப்பட்டு, வேத பாடங்கள் வாசிக்கப்பட்டன. பின்னா், நடைபெற்ற பண்டிகை தொடக்க ஆராதனையில் மதுரையைச் சோ்ந்த கிங் சாலமன் தேவ செய்தி அளித்தாா்.

நிகழ்ச்சியில் குருசேகரக் குழு செயலா் ஜெகன், பொருளாளா் அப்பன்ராஜ் ஞானதுரை, குழு அங்கத்தினா்கள், திருச்சபை மக்கள் ஏராளமானோா் கலந்து கொண்டனா். மூன்று நாள்கள் நடைபெறும் இந்தப் பண்டிகையில் ஞாயிற்றுக்கிழமை பண்டிகை ஆராதனை, விற்பனை விழா நடைபெற உள்ளது.

X
Dinamani
www.dinamani.com