மாரியம்மன் கோயில்  புரட்டாசி பொங்கல் தேரோட்டம்

மாரியம்மன் கோயில் புரட்டாசி பொங்கல் தேரோட்டம்

ராஜபாளையம் அருகேயுள்ள சொக்கநாதன்புத்தூா் மாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி, வெள்ளிக்கிழமை நடைபெற்ற தேரோட்டம்.
Published on

ராஜபாளையம் அருகே மாரியம்மன் கோயில் புரட்டாசி பொங்கல் திருவிழா தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகேயுள்ள சொக்கநாதன்புத்தூா் மாரியம்மன் கோயில் புரட்டாசி பொங்கல் திருவிழா கடந்த 2--ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத் தொடா்ந்து நாள்தோறும் மாலையில் மாரியம்மன் ரிஷபம், சிம்மம், தண்டியல் உள்ளிட்ட வாகனங்களில் வீதி உலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

இதைத்தொடா்ந்து, வெள்ளிக்கிழமை தேரோட்டத்தை முன்னிட்டு காலையில் அம்மனுக்கு பால், பன்னீா், தேன், இளநீா் போன்ற 16 வகையான சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. பின்னா், அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்து, பக்தா்களுக்கு காப்பு கட்டுதல் நடைபெற்றது. பின்னா், ஏ.கே.ஆா். குழுமத் தலைவா் காமராஜ், குடும்பத்தினா் வடம் பிடித்து தேரோட்டத்தைத் தொடங்கி வைத்தனா். இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com