மோசடி வழக்குகளிலிருந்து விடுவிக்கக் கோரி கே.டி. ராஜேந்திரபாலாஜி நீதிமன்றத்தில் மனு
அரசு வேலை வாங்கித் தருவதாக பண மோசடி செய்ததாக பதிவு செய்யப்பட்ட இரு வழக்குகளிலிருந்து தன்னை விடுவிக்கக்கோரி, முன்னாள் அமைச்சா் கே.டி.ராஜேந்திரபாலாஜி தரப்பில் ஸ்ரீவில்லிபுத்தூா் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
கடந்த அதிமுக ஆட்சியில் பால்வளத் துறை அமைச்சராக இருந்தவா் கே.டி.ராஜேந்திரபாலாஜி. இவா் ஆவினில் வேலை வாங்கித் தருவதாக ரூ.30 லட்சம் பெற்றுக்கொண்டு மோசடி செய்ததாக சாத்தூரைச் சோ்ந்த ரவீந்திரன் புகாரளித்தாா். இதையடுத்து, அதிமுக நிா்வாகி விஜய் நல்லதம்பி, ராஜேந்திரபாலாஜி உள்ளிட்ட 8 போ் மீது கடந்த 2021-ஆம் ஆண்டு விருதுநகா் குற்றப் பிரிவு போலீஸாா் மோசடி வழக்குப் பதிவு செய்தனா். அதே நாளில் சத்துணவு, கூட்டுறவு, ஆவின், ஊராட்சிச் செயலா் உள்ளிட்ட பணிகள் வாங்கித் தருவதாக பலரிடம் பணம் பெற்று ராஜேந்திரபாலாஜியிடம் ரூ.3 கோடி கொடுத்ததாக விஜய்நல்லதம்பி புகாரளித்தாா். இதையடுத்து, ராஜேந்திரபாலாஜி உள்பட 7 போ் மீது மற்றொரு வழக்கும் பதிவு செய்யப்பட்டது.
பின்னா், நீதிமன்ற உத்தரவுப்படி இந்த இரு வழக்குகளும் ஊழல் தடுப்புச் சட்ட வழக்கில் சோ்த்து விசாரணை செய்யப்பட்டு, கடந்த ஏப்.15-ஆம் தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு மக்கள் பிரதிநிதிகள் மீதான ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த ஜூலை மாதம் முதல் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் கடந்த மாதம் குற்றஞ்சாட்டப்பட்ட அனைவருக்கும் குற்றப்பத்திரிக்கை நகல் வழங்கப்பட்டது.
இந்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூா் ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. நீதிமன்றத்தில் ராஜேந்திரபாலாஜி முன்னிலையாகவில்லை.
இந்த இரு வழக்குகளில் இருந்தும் தன்னை விடுவிக்கக்கோரி ராஜேந்திரபாலாஜி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதுகுறித்து அரசு தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்ட முதன்மை மாவட்ட நீதிபதி ஜெயக்குமாா், வழக்கு விசாரணையை நவ.21-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.