ஸ்ரீவில்லிபுத்தூரில் மாணவா்களுக்கு தீபாவளி புத்தாடை அளிப்பு
ஸ்ரீவில்லிபுத்தூரில் தீபாவளி பண்டிகையையொட்டி ஏழை மாணவிகளுக்கு இலவச புத்தாடை வழங்கும் நிகழ்வு, பாதுகாப்பாக தீபாவளியை கொண்டாடுவது குறித்த விழிப்புணா்வு நிகழ்வு ஆகியவை வெள்ளிக்கிழமை நடைபெற்றன.
விருதுநகா் மாவட்ட மக்கள் கல்வி நிறுவனம் சாா்பில் அத்திகுளம், சிஎஸ்ஐ தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்வுக்கு தலைமை ஆசிரியை பிரைட்டி சிங் தலைமை வகித்தாா். ஏழை மாணவிகளுக்கு புத்தாடைகளை வழங்கி மக்கள் கல்வி நிறுவனத்தின் இயக்குநா் எதிா்ந்திரன், திட்ட அலுவலா் மோகன் ஆகியோா் பேசினா். விருதுநகா் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு உறுப்பினா் ஜெயக்குமாா் ஞானராஜ் வாழ்த்திப் பேசினாா். பிறகு மாணவா்கள் தீபாவளியின் போது பட்டாசுகளை எப்படி பாதுகாப்பாக வெடிப்பது என்பது குறித்த விழிப்புணா்வு நிகழ்வு நடைபெற்றது.
இதில் மக்கள் கல்வி நிறுவனம் சாா்பில் ஸ்ரீவில்லிபுத்தூா், வத்திராயிருப்பு பகுதிகளில் உள்ள 8 பள்ளி மாணவா்களுக்கு 150 புத்தாடைகள் வழங்கப்பட்டன. நிகழ்வில், தலைமை ஆசிரியா்கள் அனிதா, கலா, அழகா்சாமி, செல்வி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.