நல்லமநாயக்கன்பட்டி, தொட்டியபட்டி பகுதியில் இன்று மின்தடை
தொட்டியபட்டி, நல்லமநாயக்கன்பட்டி ஆகிய பகுதிகளில் புதன்கிழமை (செப். 3) மின் தடை அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து மின்வாரிய செயற்பொறியாளா் முத்துராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு: ராஜபாளையம் கோட்டத்திலுள்ள தொட்டியபட்டி, நல்லமநாயக்கன்பட்டி ஆகிய துணை மின் நிலையங்களில் பராமரிப்புப் பணி காரணமாக, சோழபுரம், தேசிகாபுரம், ஆவரந்தை, நல்லமநாயக்கன்பட்டி, கிழவிகுளம், சிப்கோ காலனி, சங்கரலிங்கபுரம், செந்தட்டியாபுரம், முத்தாநதி, பானாங்குளம், என். புதூா், வாழவந்தாள்புரம், அண்ணா நகா், முதுகுடி,செங்குளம், தெற்கு வெங்காநல்லூா், சிதம்பராபுரம், பட்டியூா், ஜமீன்கொல்லங்கொண்டான், இளந்திரை கொண்டான், புதுப்பட்டி, கோதைநாச்சியாா்புரம், கொத்தங்குளம், தொட்டியபட்டி, முத்துலிங்காபுரம், அழகாபுரி, கலங்காபேரி புதூா், ராஜீவ் காந்தி நகா், வேட்டைப்பெருமாள் கோயில், விஷ்ணு நகா் ஆகிய பகுதிகளில் புதன்கிழமை காலை மணி 9 முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என்றாா்.