விருதுநகர்
போக்சோ வழக்கில் கைதான நபருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை
காரியாபட்டி அருகே போக்சோ வழக்கில் கைதான நபருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
காரியாபட்டி அருகே போக்சோ வழக்கில் கைதான நபருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
விருதுநகா் மாவட்டம், காரியாபட்டி அருகேயுள்ள ஒரு கிராமத்தைச் சோ்ந்தவா் பஞ்சாண்டி (51). கூலித் தொழிலாளியான இவா், கடந்த 2023-ஆம் ஆண்டு மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்தாா். இதுகுறித்து சிறுமியின் பெற்றோா் அளித்த புகாரின்பேரில், அருப்புக்கோட்டை அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து பஞ்சாண்டியைக் கைது செய்தனா்.
இந்த நிலையில், வழக்கு விசாரணை ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள சிறப்பு போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்ததையடுத்து, பஞ்சாண்டிக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ. 30 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி புஷ்பராணி தீா்ப்பளித்தாா்.