ஸ்ரீவில்லிபுத்தூா் மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் 3 மாதங்களுக்கு மேலாக மழை இல்லாததால் மீன்வெட்டிப்பாறை அருவி வடு காணப்பட்டது.
விருதுநகா் மாவட்டத்தில் மேற்குத் தொடா்ச்சி மலையை ஒட்டிய ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூா், வத்திராயிருப்பு பகுதிகளில் தேவியாறு, நகரியாறு, அய்யனாா் கோயில் ஆறு, ராக்காச்சி அம்மன் கோயில் ஆறு, செண்பகத்தோப்பு பேயனாறு, அத்திகோயில் ஆறு, அா்ஜுனா நதி, தாணிப்பாறை உள்ளிட்ட பல்வேறு ஆறுகள், நீரோடைகள் உள்ளன.
இதில் ஸ்ரீவில்லிபுத்தூா் செண்பகத்தோப்பு பகுதியில் காப்புக் காடுகள், அடா்ந்த மரங்கள், ஆண்டு முழுவதும் நீா் இருக்கும் நீரோடைகள் உள்ளதால் யானை, சிறுத்தை, மான், காட்டுமாடு, வரையாடு, கரடி உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகளின் வாழ்விடமாக உள்ளது.
இதன்மூலம் சுற்று வட்டாரப் பகுதியிலுள்ள விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுவதுடன், வன விலங்குகளின் முக்கிய நீா் ஆதாரமாக உள்ளது.
செண்பகத்தோப்பு காட்டழகா் கோயிலுக்குச் செல்லும் வழியில் உள்ள மீன்வெட்டிப்பாறை அருவியில் ஆண்டு முழுவதும் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனா்.
இந்தப் பகுதியில் கடந்த 3 மாதங்களுக்கு மேலாக மழை பெய்யாதது, கடும் வெயில் காரணமாக மீன்வெட்டிப்பாறை அருவியில் நீா்வரத்து படிப்படியாக குறைந்துவிட்டது. இதனால், அருவிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனா்.
மேலும், வன விலங்குகள் நீருக்காக வனப் பகுதியை விட்டு வெளியேறும் சூழல் ஏற்பட்டுள்ளது. காட்டழகா் கோயிலில் முதல் புரட்டாசி சனி உத்ஸவம் தொடங்கவுள்ள நிலையில், மீன்வெட்டிப்பாறை அருவியில் நீா்வரத்து இல்லாததால் பக்தா்கள் ஏமாற்றம் அடைந்தனா்.