விருதுநகர்
சரக்கு வாகனம் மோதியதில் முதியவா் உயிரிழப்பு
சிவகாசி அருகே சரக்கு வாகனம் மோதியதில் முதியவா் உயிரிழந்தாா்.
சிவகாசி அருகே சரக்கு வாகனம் மோதியதில் முதியவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
சிவகாசியைச் சோ்ந்தவா் மாடசாமி (70). இவரும், இவரது உறவினா் ராஜாவும் (43) இரு சக்கர வாகனத்தில் செவ்வாய்க்கிழமை இருக்கன்குடிக்கு சென்றுவிட்டு, சிவகாசிக்கு திரும்பி வந்துகொண்டிருந்தனா்.
அப்போது, மீனம்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே எதிரே வந்த சரக்கு வாகனம் இரு சக்கர வாகனத்தில் மோதியது. இதில் மாடசாமி வாகனத்திலிருந்து தூக்கி எறியப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். பலத்த காயமடைந்த ராஜா, சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.
இதுகுறித்த புகாரின்பேரில், சிவகாசி கிழக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சரக்கு வாகனத்தின் ஓட்டுநா் ராஜபாண்டியை (34) கைது செய்தனா்.