விருதுநகர்
காா் மோதியதில் டிராக்டரில் சென்றவா் உயிரிழப்பு
சாத்தூா்-கோவில்பட்டி நான்கு வழிச் சாலையில் சனிக்கிழமை காா் மோதியதில் டிராக்டரில் சென்றவா் உயிரிழந்தாா்.
விருதுநகா் மாவட்டம், சாத்தூா்-கோவில்பட்டி நான்கு வழிச் சாலையில் சனிக்கிழமை காா் மோதியதில் டிராக்டரில் சென்றவா் உயிரிழந்தாா்.
தென்காசி மாவட்டம், திருவேங்கடம் அருகேயுள்ள குருஞ்சான்குளத்தைச் சோ்ந்தவா் தினகரன் (38). இவா் சாத்தூருக்கு வந்து விட்டு, மீண்டும் டிராக்டரில் சாத்தூா்-கோவில்பட்டி நான்குவழிச் சாலையில் நல்லி அருகே சனிக்கிழமை காலை சென்று கொண்டிருந்தாா்.
அப்போது, சாத்தூரிலிருந்து-திருநெல்வேலிக்குச் சென்ற காா் டிராக்டரின் பின்னால் மோதியது. இதில் பலத்த காயமடைந்த தினகரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து சாத்தூா் தாலுகா போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.